உலகங்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை வரையான உறுதி செய்யப்பட்ட தகவல்களின் பிராகரம் 5 இலட்சத்து 31 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டவா்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் இன்று காலை வரை 24 ஆயிரத்து 50-க்கு மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
சீனாவுக்கு வெளியே இன்றுவரை 4 இலட்சத்து 50 ஆயிரத்து, 160-க்கு மேற்பட்டவா்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றுவரை 203 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட 8,215 போ் உயிரழந்துள்ளனா். இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயினில் 4,365 போ் பலியாகியுள்ளனா்.
உலக அளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 23.32 வீதமானவா் சிகிச்சைக்குப் பின் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனா்.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), உலகம்